Skip to main content

Posts

அல்சர் ஜூஸ்

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை  சிறப்பாக இருக்கும். அல்சர் ஜூஸ் செய்முறை: வெண் பூசணியின் வெட்டப்பட்ட அனைத்து பாகங்களான தோல்,விதை உட்பட அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும்  (மேலுள்ள படத்தில் உள்ளவாரு ஒரு கீற்றை மட்டும் அரைக்கவும்)   பயன்கள்:   ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.   அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாம...
Recent posts

உடல் எடை குறையவும், இதய நோய் நீங்கவும்

பூண்டு தேன் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் வளர்சிதை மாற்றம் அடைந்து தேவையான சத்துகளைக் கொடுத்து விட்டு வெளியேறி விடும் . கல்லீரல் இதற்கு முக்கியம் பங்காற்றுகிறது. சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புகள் இரண்டு வகைப்படும். நல்ல கொழுப்பு: சில கொழுப்புகள் எங்கும் தேங்காமல் இரத்தத்தில் சேர்த்து பயணிக்கும் இது நல்ல கொழுப்பு ஆகும். கெட்ட கொழுப்பு: சில வகை கொழுப்புகள் உடலில் அங்கங்கு தேங்கும் அவை நகரும் போது மூளை இதயம் சிறு நீரகம் போன்ற உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளில் தேங்கும் போது இதய பாதிப்பு, பக்கவாதம், ரீனல் பெயிலியர் என்ற சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். கெட்ட கொழுப்பு மூன்று வகையாக கணிக்கப்படுகிறது. அவை இரத்தக் குழாய்களுக்கு மேல் வரும் அதிரோசெலரோசிஸ் ( Atherosclerosis ) த்ராம்போசிஸ் ( Thrombosis ) எம்பாலிசம் ( embolism ) எனப்படும் . இந்த மூன்று வகைக் கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை பூண்டுக்கும் தேனுக்கு உண்டு. மரணத்திற்கு ஏதுவான ஆபத்தை உண்டாக்கும் ஐந்து வகையான நோய்கள் கார்டியோ வாஸ்குலர் டிசீஸ் ( Cardiovascular Fisease ( CVD ) உ...

குடலை குணமாக்கும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய் : 1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம். 2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும். 3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும். 4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும். 5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும். 6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியி...

வாய்ப்புண் தீர மணத்தக்காளி கீரை

தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும்  சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகளை பற்றி பார்ப்போம் வாருங்கள். நீங்கள் பெரும்பாலும் அலோபதி மருத்துவமனை தேடும் முன் இந்த முறைகளை செயல்படுத்தி நல்ல பலன் பெறலாம். 1).நோய் தொற்று வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் அதிகமாக பரவி இருந்தால் மூன்று வேளைகளும் தயிர் மற்றும் கஞ்சி சாப்பிடுவது நல்லது. 2). மணத்தக்காளி கீரை  மணத்தக்காளி கீரை யின் இலைகளை காலை வேளைகளில் உணவுக்கு முன் ஒரு கைப்பிடி எடுத்த பச்சையாக வாயில் போட்டு மென்று அதன் சாறு வாய் முழுக்க பரவுமாறு முழுங்குங்கள். அதன் பழங்களும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 2). அகத்திக்கீரை மணத்தக்காளி  கீரையை போ...

ஆலமரத்தின் பயன்கள்

தாவர இயல் பெயர்: Ficus benghalensis இதன் மறு பெயர்கள்: பகுபாத,கசீரி, வனசுபதி, ரக்தபல, நியக்ரோத, சிருங்கி, மகச்சாய வளரும் இடங்கள்: இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. பயன் தரும் பகுதிகள்: இலை, பூ, விதை, பழம், பால், பட்டை, விழுது பொதுவான தகவல்கள் : ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. "ஆல்" பெயர் காரணம்:- மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையான பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வ...

மூலம் முதல் மூட்டுவலி வரை துத்தி கீரையின் பயன்

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைத் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும். மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ் சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுரும் இப்படியீற் றுத்தியிலை யை  மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.   நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நாம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலசிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து. இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்ப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளி...

வெங்காய பூவின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில்   பல   வகையுண்டு .  பெரிய வெங்காயம் ,  சிறிய   வெங்காயம் ,  வெள்ளை வெங்காயம்   ஆகும் .  இந்த   வெங்காயத்தில்   மருத்துவ குணங்கள்   இருப்ப ‍ து   உங்களுக்கு   தெரியும் ஆனால்   வெங்காய   பூ - வில் மருத்துவ   குணம் இருக்கிறது   என்பது உங்களுக்கு   தெரியுமா ? வெங்காயத்தையும்  , வெங்காயப்பூவையும்   சேர்த்து அரைத்து   ஒரு   அவுன்ஸ்   சாறு   எடுத்து   இரவில்   வெறும் வயிற்றில்  48  நாட்கள்   பருகிவர   காசநோய் குணமடையும் . வெங்காயப்பூக்களையும்   வெங்காயத்தையும் ,  பொடியாக   நறுக்கி   தயிரில்   ஊறப்போட்டு   சாப்பிட மூலம்   தொடர்புடைய   எரிச்சல் ,  குத்தல்   குணமடையும் . கண்நோயால்   பாதிக்கப்பட்டு   பார்வை   மங்கலாக இருப்பவர்கள்   வெங்காயப்பூவைக்   கசக்கி   சாறு பிழிந்து   எடுத்து   இரண்டு   சொட்டு   சாறுகாலை ,  மாலை க...