Skip to main content

உடல் எடை குறையவும், இதய நோய் நீங்கவும்


பூண்டு தேன்

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் வளர்சிதை மாற்றம் அடைந்து தேவையான சத்துகளைக் கொடுத்து விட்டு வெளியேறி விடும் . கல்லீரல் இதற்கு முக்கியம் பங்காற்றுகிறது. சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புகள் இரண்டு வகைப்படும்.

நல்ல கொழுப்பு:

சில கொழுப்புகள் எங்கும் தேங்காமல் இரத்தத்தில் சேர்த்து பயணிக்கும் இது நல்ல கொழுப்பு ஆகும்.

கெட்ட கொழுப்பு:

சில வகை கொழுப்புகள் உடலில் அங்கங்கு தேங்கும் அவை நகரும் போது மூளை இதயம் சிறு நீரகம் போன்ற உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளில் தேங்கும் போது இதய பாதிப்பு, பக்கவாதம், ரீனல் பெயிலியர் என்ற சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

கெட்ட கொழுப்பு மூன்று வகையாக கணிக்கப்படுகிறது. அவை இரத்தக் குழாய்களுக்கு மேல் வரும் அதிரோசெலரோசிஸ் ( Atherosclerosis ) த்ராம்போசிஸ் ( Thrombosis ) எம்பாலிசம் ( embolism ) எனப்படும் . இந்த மூன்று வகைக் கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை பூண்டுக்கும் தேனுக்கு உண்டு.

மரணத்திற்கு ஏதுவான ஆபத்தை உண்டாக்கும் ஐந்து வகையான நோய்கள் கார்டியோ வாஸ்குலர் டிசீஸ் ( Cardiovascular Fisease ( CVD )

உடல் பருமன் ( Obesity ), பக்க வாதம் ( stroke ) , புற்று நோய் ( cancer ) , சிலவகை தொற்றுநோய்கள் (contagious disease ), என வகுத்திருக்கிறார்கள் . இந்த ஐந்து நோய்களுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து பூண்டு தேன் ஆகும்.

பூண்டு தேன் செய்யும் முறை:

தேவையான அளவு நாட்டுப் பூண்டுகளை உரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அவை மூழ்கும் வரை சுத்தமான தேன் ஊற்றி ஒரு வாரம் ஊற வைக்கவும். ஒரு வாரம் தேனில் ஊறிய பின் பூண்டின் சல்பர் வாசனை நீங்கி விடும். காரம் குறைந்து விடும்.
இதை மருந்தாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

மருந்து சாப்பிடும் முறை: 

நோய் உள்ளவர்கள் நாள் தோறும் இரண்டு வேளைகள் வேளைக்கு மூன்று பற்கள் சாப்பிட்டு வரலாம். எந்த நோயும் இல்லாதவர்கள், இரவு படுக்கப் போகும் முன் இரண்டு பற்கள் சாப்பிட்டு வரலாம். தேனையும் சேர்த்து சாப்பிடலாம். அது மட்டுமன்றி பூண்டு தேன் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட மிக மிக உதவும். சில நோய்களுக்காக வருடக் கணக்காக மருந்து சாப்பிட்டும் எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை என வருந்தி நிற்கும் நோயாளிகளுக்கான சிறந்த மருந்து இந்தப் பூண்டு தேன் ஆகும்.

நன்றி: வீட்டு மருத்துவம்

Comments

Popular posts from this blog

வெங்காய பூவின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில்   பல   வகையுண்டு .  பெரிய வெங்காயம் ,  சிறிய   வெங்காயம் ,  வெள்ளை வெங்காயம்   ஆகும் .  இந்த   வெங்காயத்தில்   மருத்துவ குணங்கள்   இருப்ப ‍ து   உங்களுக்கு   தெரியும் ஆனால்   வெங்காய   பூ - வில் மருத்துவ   குணம் இருக்கிறது   என்பது உங்களுக்கு   தெரியுமா ? வெங்காயத்தையும்  , வெங்காயப்பூவையும்   சேர்த்து அரைத்து   ஒரு   அவுன்ஸ்   சாறு   எடுத்து   இரவில்   வெறும் வயிற்றில்  48  நாட்கள்   பருகிவர   காசநோய் குணமடையும் . வெங்காயப்பூக்களையும்   வெங்காயத்தையும் ,  பொடியாக   நறுக்கி   தயிரில்   ஊறப்போட்டு   சாப்பிட மூலம்   தொடர்புடைய   எரிச்சல் ,  குத்தல்   குணமடையும் . கண்நோயால்   பாதிக்கப்பட்டு   பார்வை   மங்கலாக இருப்பவர்கள்   வெங்காயப்பூவைக்   கசக்கி   சாறு பிழிந்து   எடுத்து   இரண்டு   சொட்டு   சாறுகாலை ,  மாலை க...

குடலை குணமாக்கும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய் : 1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம். 2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும். 3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும். 4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும். 5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும். 6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியி...

ஆலமரத்தின் பயன்கள்

தாவர இயல் பெயர்: Ficus benghalensis இதன் மறு பெயர்கள்: பகுபாத,கசீரி, வனசுபதி, ரக்தபல, நியக்ரோத, சிருங்கி, மகச்சாய வளரும் இடங்கள்: இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. பயன் தரும் பகுதிகள்: இலை, பூ, விதை, பழம், பால், பட்டை, விழுது பொதுவான தகவல்கள் : ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. "ஆல்" பெயர் காரணம்:- மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையான பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வ...